எனது பெயர் ஹரி பிரியா.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நான், விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரியில் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் பயின்று வருகின்றேன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் போதே கட்டற்ற மென்பொருள் பற்றி அறிந்தேன். அதன்மூலம் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் இணைந்து தொழிற்நுட்ப ரீதியாகவும், மொழியியல் சார்ந்த மற்றும் சில தளங்களிலும் எனது பங்களிப்பை தந்து வருகின்றேன்.